காலணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காலணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஜூலை 13, 2021

அரூபவல்லி

 எல்லோரும்

அலையில் கால்நனைத்து
ஆடைகளைப்
பற்றிக்கொள்ளும்
மணலை அலசி
மீண்டும் அலையாடி
மணல் உதறிக்
கொண்டாடிக்கொண்டிருந்த
புகைப்படங்கள் எதிலும் அம்மா இல்லை

எல்லோர் கைப்பை,காலணி இத்யாதிகளைக் காத்தபடி
அவள் இருந்த இடம் புகைப்படத்துக்குள் அடங்கா தூரம் ********************************************
அவர்களும் ஒருநாள்
ஒளிர்கண்களால்
நேரடியாக நம்மைப் பார்த்தார்கள்
கருகருவெனத் தலைநிறைந்த முடி முன்நெற்றியில் வழிய
மொழுமொழுவென்ற
விரல்களால் நம் முகம் வருடினார்கள்
இடுக்கு விழுந்த ,தெத்திய இயற்கையான பல்மினுங்க சிரித்தார்கள்
நினைவில் தங்கிய சித்திரத்தில்
வயது அவர்களின்
எல்லாவற்றையும் பறித்துக்
கொண்டுவிட
இளையவர்கள் யாரோவாகக்

கிழவர்களே உறவாயினர்

புதன், செப்டம்பர் 23, 2020

நந்தியாவட்டையின் ஒளிர்பச்சை

 உப்பு ரொட்டியின் உடைந்த தூளைத் தொட்டுத் தொட்டு ஒற்றிக்கொள்வது கூட மீட்சிதான் பத்திய நாவுக்கு

*********************************************************

தாழ்ப்பாளின் துரு
காத்திருக்கும் தனிமை
காலணியின் சேறு
வாசலோரத் தெருநாயின் அரைத்தூக்க
முனகல்
அதிகாலையோ
அந்திமாலையோ
உனக்கென்ன
**********************************
மறந்தேபோய்விட்ட
பழையவீட்டு
நந்தியாவட்டைக் கிளையை வளைத்தபடி
நிற்கிற கனவு
எத்தனை ஒளிர் பச்சை
அதன் இலைகள் என்கிறாய்
அதிசயம்போல்

வியாழன், பிப்ரவரி 07, 2019

கடைத்தேற்ற நீளும்

வாகனத்தை நிறுத்துமுன்
காலணிகளைக் கழற்றிவிடுமுன்
சின்னதும் பெரிதுமாகக்
கரங்கள் நீண்டுவிடுகின்றன
மெலிந்து குழிந்த கரங்களைப் 
பார்த்தும் பாராதுபோல் நடக்கப் பயின்று
 பயின்று
பழகியேவிட்டது நீளும் கரங்கள்
பற்றிய கற்பிதம்
இப்படியான ஏதோ ஒரு பொழுதில்தான் 

தவறவிட்டிருப்பீர்கள் 
உங்களைக் கடைத்தேற்ற 
நீண்ட கரங்களையும்

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...