நிறம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நிறம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஜூலை 25, 2019

பறவையின் இறகில் உன் நிறம்

உலகில் புரிதல் மிச்சமிருக்கிறது
அன்பு மிச்சமிருக்கிறது
ரசனை மிச்சமிருக்கிறது
உன்னை அழைத்து சொல்ல நினைத்தவற்றை
எனக்கே சொல்லிக்கொண்டேன்
உனக்காய்த் தோன்றும்போது
நீயும் சொல்லிக்கொள்வாய்
கருநீலவாலை லேசாக உதறி
விரித்துக்கொள்ளும்
அந்தப் பறவையின் இறகில் 

உன்நிறம் உணர்வதும் அப்போது நடக்கும்
படம் swaminathan Rajamani

சனி, பிப்ரவரி 27, 2016

நதி

நான் பார்த்த நதியின்
நீளமும் அகலமும்
நான் பார்த்த மலையின்
உயரமும் உச்சியும்
நான் பார்த்த வானத்தின் 
நிறமும் விரிவும்
நான் பார்த்த வரை
ஓடிக்கொண்டிருக்கும் நதியும்
உயர்ந்து கொண்டிருக்கும் மலையும்
மிதந்து கொண்டிருக்கும் வானமும்
நிஜத்தில் எதுவென்று
நீங்கள் பார்த்ததுண்டா

புதன், ஜனவரி 06, 2016

நிறமாலை


அடிவயிற்றிலிருந்து
குரலெடுத்து அன்னையின் மரணத்தில்
கட்டியழுத சித்தியின் 
கத்தரிப்பூ சேலை நிறமா
வளர்வதற்கெல்லாம் முன்பு
பிள்ளைகள்
உருட்டிப்போடச்சொல்லி உண்ட
பொட்டுக்கடலைத் துவையல் சோற்றின்
மங்கிய சந்தன நிறமா
ஊசுட்டேரிக்கரையில்
தருவதான பாவனையில்
தாய்க்குக்காட்டி தான்ஊட்டிக்கொண்ட
குழந்தையின் பிஸ்தா பனிக்கூழ் நிறமா
பாராமல் கடந்துசெல்லும்
போக்கு தாளாமல்
நீலத்தையும் பச்சையையும்
துறந்து நிறமிலியாய்
ஆர்ப்பரிக்கும் பௌர்ணமி அலைநிறமா

அன்பின் கதிர் என்ன நிறம் 

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...