முற்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முற்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஆகஸ்ட் 24, 2021

தாட்சாயணி

 வலம்புரிச்சங்கில்

பிறந்தாளாம்
ஆனாலும்
மெழுகிய முற்றத்தில் பிறந்த
எங்க சின்னாயி போலவே
கட்டினவனுக்கும் பெத்தவனுக்கும் நடுவே
சிக்கிச் சிதறியிருக்கிறாள்
தாட்சாயணிதான் சின்னாயி
சின்னாயிதான் தாட்சாயணி
ஆனால் அவள்களுக்கு
அவள்களைத்தவிர
யாரைப்பற்றியோ கவலைப்படதான்
வாய்த்திருக்கிறது

வியாழன், மே 05, 2016

சொந்த முற்றமிலா வாழ்வு

முல்லை மலர்வதும்
வாழை மடலவிழ்வதும்
பார்க்குமளவெல்லாம்
வாய்க்கவில்லை
சொந்த முற்றமின்றி 
சோற்றுக்கவலை துரத்தும்
வாழ்வில்

புதன், மார்ச் 30, 2016

மார்ச் பூக்கள்

ஒளிச்சுடர் என்னைக்கடந்து செல்கிறது ஆரஞ்சு தளும்ப
மஞ்சள் மின்னலை 
எதிர்நோக்கிய கண்களோ
பாதையில் அலைபாய்கின்றன
******************************************
குவிந்த கரங்களுக்குள்
பொன்வண்டு 
சிறகடிப்பதை நிறுத்தாது
தீப்பெட்டி சதமில்லை 
சிறகுக்கு
சொல்லிக் கொண்டுதான்
இருக்கிறேன்
உயர்ரக தினை மற்றும்
கத்தரி என்வசமுண்டு என

**************************************
வெயில் இறங்கி இறங்கி 
முற்றத்தையும்
வாசலையும் விட்டு 
வெளியேறி 
தெருவின் அடியில்
படுத்துக்கொள்ளத்தானே
போகிறது.
அதை நினைத்து
துடைத்திடு
வியர்வை அல்லது கண்ணீர்



வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...