ரசீது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரசீது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஏப்ரல் 08, 2020

காந்திமதியின் சொத்து

அடகுக்கடை
ரசீதுகளை மடித்து ஒடுக்கிய
உள்ளூர் நகைக்கடை பெயரழிந்த நைந்த
மணிபர்ஸ்
காந்திமதியின் மாபெரும் சொத்து
அரிசிபருப்பு 
அஞ்சரைப் பெட்டியெல்லாம் 
அலசி எடுத்துவிட
டாஸ்மாக் தந்திரங்களைப் 
பயின்ற கணவனால்
எப்போதும் வியர்வையில் ஊறிய 
ரவிக்கைக்குள் அடைகாப்பாள் 
இல்லப் பொருளாதாரம்
சாகாவரம் பெற்ற
வறுமைக்குப் புட்டிப்பால் 
அவள் சுண்டியெறிந்த கண்ணீர்
சிரித்தபடியே 
இறுக்கிக்கட்டும் துடைப்பத்துக்கு 
அவள் வாழ்வின் குப்பைகளைக் 
கூட்டியெறியத் தெரியவில்லை
காந்திமதி கேட்கிறாள்
கட்டி கட்டியா நவ( நகை) போட்டுக்கிட்டு வாராவளே 
அவங்க ஊட்டுல தங்கம் காய்க்குமா

திங்கள், ஜூலை 10, 2017

நிலா நதி ரசீது

கரையோரம் 
காத்திருந்த போதெல்லாம்
கையிலிருக்கும் துடுப்பு
ஓடமேறும்போது
தவறிவிடுகிறது


****************************************
நிலா 
நடந்துகொண்டிருக்கிறது
கரையோர மரங்களூடே
நதியில் 

முகம்பார்க்கவியலாத போதும்
*************************************************

எந்த குற்றவுணர்ச்சி வழிந்தாலும்
ரசீதுகளால் துடைத்துக்கொள்ள முடிகிறது
பாக்யம் பாக்யம்

*************************************************************
பொய்,புரட்டு,ஏமாற்று
வஞ்சகம்,சூது,கொலை
பொய்,புரட்டு,ஏமாற்று
வஞ்சகம்,சூது,கொலை
பொய்,புரட்டு,ஏமாற்று
வஞ்சகம்,சூது,கொலை..
.....
...திரும்பத் திரும்ப தெரியாமல்
எழுதிவிட்டேனா எனப் பார்க்கிறீர்கள்
நூறு வரி கடந்து
வேண்டுமானால் ஒருமுறை
எழுதிவிடுகிறேன்
விசாரணை,வழக்கு,கைது
பிணை....வருடங்கள்.....

********************************************************






வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...