வாசல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாசல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஏப்ரல் 20, 2021

வீடு முழுக்க உட்கார்ந்த டங்

 சின்ன அணில் பெரிய அணில்

எது எதைத் துரத்துகிறது தெரியவில்லை.
சமயத்தில்
சின்னது முன்னே
அப்படியே ஒரு அரைவட்டத்திருப்பலில்
மாறிவிடுகிறது
அன்பா
பந்தயமா
அடிதடியா
ஒன்றும் புரியவில்லை
சட்டென்று ஓட்டக்கோடுகளை விட்டுப் படியிறங்கி
என் பாதம் நெருங்கிவிட்டது ஒன்று
பதட்டத்தில் நகர்ந்துகொண்ட பின்தான் தோன்றியது
சின்னதா,பெரிதா எது மிரட்டியதெனப் புரியாதது ************************************************
வாசல் திறந்துவிடுவதென்பது
ஒரு சம்பிரதாயம்
அடைப்பதென்பதும்
விழுந்த சருகு
காற்றிலடித்துக்கூட
உள்நுழையா நாளுண்டு
வந்தவரெல்லாம்
வெளியேறியும்
கிராதிக்கதவின் டங்
வீடு முழுக்க உட்கார்ந்து விடும் நாளும் உண்டு
*******************************************************

வெள்ளி, அக்டோபர் 02, 2020

சுவடுகளை விழுங்குதல்

 

தெரியும்
திறந்துகிடக்கும் வாசலைத் தாண்டி
சுவடின்றி நீ கடந்தாலும்
அது எப்படியோ தெரியும்
உனக்கும்

 

************************************************

 

 

கூடத்தில் படிந்துவிடும்
மணல்பார்த்து
ஆச்சர்யந்தான்
அதுவும் திகைத்துப் போய்விடுகிறது

கூட்டிக்குவித்ததும்



******************************************

 

 

எனது கடவுள் இவன்தான்
எனது சாத்தான் இவன்தான்
எனது மது  இதுதான்
எனது விஷம் இதுதான்
வரையறுத்துவிடவே முடியவில்லை

முடியவில்லையா

தெரியவில்லையா

தெரியவில்லை

 

புதன், ஏப்ரல் 08, 2020

என்னைப்பாரடி

அக்கம்பக்கம்
இடித்துக்கொள்ளாமல்
பார்த்துத்திரும்ப
வழிகாட்டி முடித்ததும்
ஐந்தோ பத்தோ நீட்டி
ஒரு
அவலச்சிரிப்பைப் பெற்றுக்கொள்
அவன்கும்பிடு இங்கு
உன் கும்பிடு எங்கோ
வாங்கிக்கொடு
கொடுத்து வாங்கு
எல்லோருக்கும்
இருக்கிறது
ஒரு வாசல்


*************************************************************
மாற்றிமாற்றிக் கட்டிப்பார்க்கிறேன்
சார்த்திய காஞ்சிப்பட்டுக்கும்
காக்காபொன்னுக்கும்
மலர்க்கண்
எப்போதும் அப்படியே
அம்மை
கிளியை விட்டு என்னைப்பாரடி
ஒருமுறையேனும்

**********************************************
எங்கும் பார்த்திராதவள் என்று தெரிந்தாலும்
எங்கோ பார்த்ததுபோல்தான்
இருக்கிறது
நினைவைத்தொட்டு
இட்டுக்கொள்
ஒரு பொட்டு

************************************

சனி, டிசம்பர் 07, 2013

நனவிலி

உன் சொல்லுக்காகக் காத்திருக்கிறேன் 
புதிய மொழி கற்றவன் 
எழுத்தெழுத்தாக இணைத்துப் பார்த்து 
மனசுக்குள் உச்சரித்து ஒத்திகை பார்த்து 
வெட்கமோ ஆர்வமோ தெறிக்கப் பேசுவது 
போல் 
நீ அன்பின் மொழிக்குள் 
அமிழ மாட்டாய் ...
தெரியும்...
வறுமை உணவே ஆடம்பரமாக்கியபோதும்
ஆவல் தின்பண்டக் கனவு தராதா என்ன....
நான் கனவிலிருக்கிறேன் ...


வெற்றுக் கோப்பைகளுடன் 
நீ வாசல் திறக்கிறாய் 

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...