புன்னகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புன்னகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், நவம்பர் 23, 2017

வீழ்சருகின் குரல்

தரையோடு படர்ந்து கிடக்கிறது குப்பைக்கீரை
பெயரின் கண்ணாடியில்
முகம் பார்க்கத் தெரியாதவரை
பிழைத்தேன்

********************************************************

வீதிகளற்ற கனவில் 
தினமும் தாவிக்கொண்டிருக்கும் பட்டாம்பூச்சி 
எதிர்ப்படும் கைரேகை பட்டழிகிறது

***********************************************************
புல்லையும் அளவாகக்
கத்தரித்துவிட வேண்டிய
உலகில் 
விடுதலை கீதம்
பாடிச்சுற்றும் பொன்வண்டே
உன் சின்னச்சிறகுகள்
கண்டு பட படக்குதென் இதயம்


***************************************************************
மேல் கீழாக எழுதிப் பார்த்தேன்
கீழ்மேலாகவும்
இடவலம் வல இடம்
எப்படி எழுதிடினும்
குன்றா கசப்பு 
தேனால் மெழுகித்தான் என்ன


************************************************************
விழுதாடிக்கொண்டிருந்த
காற்றைப் பார்த்து சிரித்துக்கொள்கிறது
அடர்கிளை
இங்கோ
அடர்கிளையின் இலை
துறந்த ஒற்றைக்குச்சி


**********************************************************
கழிவிரக்கப் புன்னகைக்குப் பதில்
காறித் துப்பிவிட்டு
சுருண்டது நிழல்


*****************************************************

இந்த நதியின் அலைகளுக்கப்பால்
இந்த முகடுகளின் மேகப்பூச்சுக்கப்பால்
இந்த நீலத்தின்
கூசும் ஒளிக்கப்பால்
இருப்பதெல்லாம் இருள்
ஏன் இத்தனை திரை


********************************************************
இலை இலை இலை
அடுக்கடுக்கடுக்காக
இலை
வளைந்து நெளிந்து
நுழையும் கீற்று அதுபோக்கில்தான் தரை தொடுகிறது
கோணல் புன்னகையென
சலம்புகிறது வீழ்சருகு


**********************************************************
எதுவுமே நினைக்காதவர்கள்
பற்றிக்கூட
என்ன நினைப்பார்களோ என 

நினைத்துக்கொள்கிறீர்கள்


ஞாயிறு, நவம்பர் 08, 2015

நினைவ(வி)லை

அந்த நொடியில்
உன்கண் எப்படிஒளிர்ந்திருந்தது
ஒருவிரல் உயர்த்தி
நீ சுட்டிநின்ற காட்சி
அதன் ஒயில்
கடல்பச்சையும் நீலமுமான உன்ஆடை
காற்றில் உயர்ந்துஅலைந்தஅதன்பிரி
சரிகையோ எனத் தோன்றவைத்த
ஒளியின் இழை

உன்இதழில் இருந்த புன்னகை
அன்பின்மிச்சமா
என்பதைத்தவிர
மற்றஎல்லாம் நன்றாகவேநினைவிருக்கிறது

அந்தப்புன்னகை நினைவில்லை
என்றாசொன்னேன்
இல்லையில்லை
புரியவில்லை

சனி, அக்டோபர் 24, 2015

வருத்த வருத்தம்

இறந்தவர்
கடைசியாக என்னமனநிலையில்
எந்தவிளிம்பில்நின்றார்
என்பதை அறியாமல்
துக்கம் கேட்கப்போவது
பெருந்துயரம்
அன்றையநாளின் குலைந்த கிரமமோ
உச்சந்தலைக்கருகே உரசும் வாள்
நிர்ப்பந்தங்கள் கொண்டுநிறுத்தியிருக்கும்
இக்கையறுநிலையில் துளிர்க்கும்
உங்கள்கண்ணீரை
அவருக்கான துயரமாக மாற்றிப்
புரிந்துகொண்ட
எவரேனும் உங்களை
ஆற்றுப்படுத்தக்கூடும்
வருத்தத்தைவிட சௌகர்யமாகக்கூட
நீங்கள் உணரலாம்
பந்தலிலே பாவக்கா பாடல்
நினைவுக்குவருமுன்
எழுந்துவிடுங்கள்
சாவுவீட்டில் சொல்லிக்கொள்ளாமல்
போகலாம்
இல்லாவிடில் புன்னகைத்துத்
தொலைக்கப்போகிறீர்கள்


சனி, அக்டோபர் 10, 2015

ஆறுதல் புன்னகை

களிம்புகளும் ,பசைக்குழாய்களும் 
இறைந்து கிடக்கும் 
மேசையடியில் அமர்ந்துதான் 
தொலைக்காட்சி பார்ப்பது 
நறநறத்துக் கிடக்கும் 
மனசுக்கென்றும் 
ஒருத்தி புன்னகைப்பாள் 
என்ற நப்பாசையில் 
சின்னத்திரையை 
உற்று நோக்கிக்கொண்டே ....


18 5 15  கல்கியில் 

புதன், ஜூன் 11, 2014

புன்னகைக்கு மணமுண்டா ..



உனக்கு வியப்போ ,எரிச்சலோ,
வரலாம்....
ஆனாலும்,இதற்கு விடை தா....
ரூபியின் புன்னகையில் 
சமையலறை தாளிப்பு வாசமும்,
அம்மாவின் புன்னகையில் 
கவலைகளின் கசங்கிய வாசமும்,
தேவாவுக்கு இழப்பின் 
அழுகல் வாடைச் சிரிப்பும்,
ரஞ்சியிடம் பொறாமையின் 
மழுப்பலான குப்பைநெடியும் ,
உணர்ந்தேன்  என்றாயே....
என் இதழ் உதிர்ப்பதில் 
நீ உணர்ந்ததென்ன 

சனி, ஜனவரி 05, 2013

நுழையா விருந்து




தேநீர்ப் பித்து
குளம்பி பக்தி
பால்மாப் பாலகர்
எல்லோருக்குமென
எடுத்தெடுத்து வைத்த
உறைபிரிக்காக் கோப்பைகளுக்குத்
துணை
சேர்த்துக் கொண்டேயிருக்கிறேன்
என்றேனும் பரிமாறும்
நம்பிக்கையில்..,
உன் புன்னகையில் தெரியும்
இகழ்ச்சி
என் கண்ணுக்கு தெரியும் .
என் விதைகள்
முளைவிடும் என்பதையோ
நீயும் உன் புன்னகையும்
அறிவதில்லை...

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...