தொட்டிச்செடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொட்டிச்செடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், டிசம்பர் 09, 2021

தொடத்தொட

 எங்கோ மழை

இருண்ட திசைநோக்கி
வாரிச்சுருட்டிக்கொண்டு ஓடும் மேகங்கள்
ஆகாயத்தில் கால்கள் பின்னிநிற்க குடைகளை விசிறி ஆடும் நாயகியாக
என்றுதான் துள்ளியிருக்கிறோம்
துப்பட்டாவோ
முந்தானையோ
சடசடத்து இறங்காது காக்க
சலிந்து இறங்கிய சொட்டுகளை
நா நீட்டி சுவைத்தறியா வாழ்வு
ஆவிபிடி அதிகாரங்கள் முடிந்தபிறகாவது
ஒருநாள்
நனைதலுக்கு
ஒதுக்கலாம்
இப்போதைக்கு
தொட்டிச்செடி
துளிர்களின் குளுமையைத்
தொட்டுக்கொண்டு வாழ்வோம் வா

சனி, செப்டம்பர் 29, 2018

மழை மழை....

நீங்கள் புறக்கணிப்பீர்கள் எனத்தெரிந்தாலும் 
காற்றோடு போராடிக்கிழிந்து 
உங்கள் கொல்லை வாழையிலேயே 
தங்கிவிடுகிறது இலை
ஆறுதலாக இரண்டு துளிதெளித்து 
நகர்கிறது மழை

****************************************
மழையின் குளுமை மனங்கொள்ள
வா
என்னை ஓரமாக எடுத்து வை 
யாரைக் கூப்பிடுவதெனத் 
தவிக்கிறது தொட்டிச்செடி

****************************************************
பார்ப்பதற்கு நீங்கள் தேடுவது போலவே
விழுவதற்கு மழையும் தேடுகிறது 
ஒரு கண்ணாடி சன்னலை
அப்போது வழிந்த அழகின்
நினைவு
அதற்கும்
(nandri TK Kalapriya)
****************************************************

திங்கள், டிசம்பர் 04, 2017

மீனின்குரல் கேட்கும் தூண்டில்

வனத்தில் நிறைந்திருந்த
வயலட் சிறு பூக்களின் பெயர் தெரியவில்லை
வண்ணத்துப் பூச்சிக்கும் எனக்கும்
அதனாலென்ன

********************************************************
கு
ளத்தின் பாடலை 
நீங்கள் தவளையின் குரலில் கேட்கிறீர்கள் 
உங்கள் தூண்டில் மீனின் குரலில் கேட்க 
நானோ நீரின் குரலில்

********************************************************
தூறலில் தொடங்காத 
மழையையும் 
பழகிக் கொள்கின்றன தொட்டிச் செடிகள்
***************************************************************

கண்ணாடித்தாள் போலச் சிறகு விரிக்கும் வண்ணத்துப்பூச்சி 
எங்கு கிழிபடுமோ 
பதட்டமாயிருந்ததில் 
சற்றுமுன் கிழித்த இதயம் மறந்து போனது

******************************************************************


வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...