நான் பேசாமல் என்னோடு
பேசிக் கொண்டிருந்திருக்கலாம்
பேசாத உன்னோடு பேசிக் கொண்டிருப்பதாய்
மட்டுமே புரிந்து கொண்டு
கேட்காத உன்னோடு பேசிக் கிடந்திருக்கிறேன்
என் துயரெலாம் இப்போது
என்னைப் பற்றியே அல்ல
ஏந்திக் கொள்ள யாருமின்றி
சுவரில் மோதித்
தரையில் புரண்டுக்
காற்றில் கைவிரித்தழும்
என் சொற்களை
எப்படி ஆறுதல் செய்ய.....