செவ்வாய், மே 06, 2014

அங்கீகாரத்தின் குரல்


நான் பேசாமல் என்னோடு 
பேசிக் கொண்டிருந்திருக்கலாம் 
பேசாத உன்னோடு பேசிக் கொண்டிருப்பதாய் 
மட்டுமே புரிந்து கொண்டு 
கேட்காத உன்னோடு பேசிக் கிடந்திருக்கிறேன்
என் துயரெலாம் இப்போது
என்னைப் பற்றியே அல்ல
ஏந்திக் கொள்ள யாருமின்றி
சுவரில் மோதித்
தரையில் புரண்டுக்
காற்றில் கைவிரித்தழும்
என் சொற்களை
எப்படி ஆறுதல் செய்ய.....

-லதாம்மாவின் மரணம்


நான் ஏறிய பேருந்து,
அடுத்த தெருப் பள்ளிக்கூடம் ,
எங்கும் ஒட்டப்பட்டிருந்தது 
அந்தக் கண்ணீரஞ்சலி சுவரொட்டி ...

முட்டைக் கண்ணன் என்றோ,
தனா என்றோ கூப்பிடப்பட்ட 
லதா அண்ணன் அதிலே 
தனபால் ஆகியிருந்தான்...

வருந்தும் பா தனபால் குடும்பத்திற்குள் 
லதாவும் அடக்கம் என்றும் தெரியவில்லை,
லதாம்மாதான் 
ஆதிலட்சுமி என்றும் தெரியவில்லை

பறக்கும் தலையும் மூளிக்காதும்,
தாம்புக் கயிறுமாகவேதிரிந்த 
லதாம்மாதான் 
கொத்துச் சங்கிலியும் 
குறிப்பாகப் புன்னகையுமாகச் 
சுவரொட்டியில் பார்க்கிறாள் 
என்றும் தெரியாமல்தான் 
அன்று கடந்தேன் என்பதைச் சொல்லித் 
துக்கம் விசாரிக்கலாமா ..... 

7 5 14-ஆனந்தவிகடனில் வெளியானது.

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...