சனி, டிசம்பர் 22, 2012

அபி உலகம் -11




வாசல் வேம்பு
வந்த கதை கேட்டாள் அபி
'காக்கா ,ஒரு வேப்பம்பழம்
சாப்டுச்சாம் ...
ம் ...
அந்த வெதைய  நம்ம வீட்டு
வாசல்ல போட்டுச்சாம் ..                                     
ம்ம்
அதுதான் வளர்ந்து மரமாச்சாம்..."
கையிலிருந்த ஆப்பிளோடு
காகத்துக்காகக் காத்திருக்கிறாள் அபி.
**********************
நூடுல்ஸ் காய்ப்பது
செடியிலா,மரத்திலா..
சாக்லேட்  காயா,பழமா...
காக்காய் பாட்டியிடம் திருடும்
வடை கீழே விழுந்தால்
வடை மரம் முளைக்குமா ?
அபியின் கேள்விகளோடு
விழித்திருக்கும் தாத்தாவுக்கு
கொஞ்சம் கைகொடுங்களேன் ....

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...