திங்கள், ஜூலை 14, 2014

அபி உலகம்-நீண்ட இடைவெளிக்குப் பின்

வாசல் முருங்கையின்
வலுவில்லாத கிளைகளில்
கூடு கட்டியது  பறவை
வழக்கம்போல் பூ உதிர்க்கப் போன
அபியிடம்
அம்மா உச்சு கொட்டினாள்..
ஏம்மா ..
பாவம் அபி ..அந்தக் கூடு
கலைஞ்சுரும்
கலைஞ்சா என்ன
நம்ப வீடு மாதிரிதானே
அம்மா ..அது கூடு கட்டும்போது
நீ பார்த்தியா
ம்ம்...கொஞ்ச கொஞ்சமா குச்சி வெச்சு
ரெண்டு நாளாக் கட்டுச்சு அபி....
நீ மோசம்மா....
ஏண்டா....
பாத்துகிட்டே சும்மாதானே இருந்தே ...
சொல்லியிருக்கலாம்ல...
என்ன அபி  பூ உலுக்குவான்னா....
இல்லம்மா...நம்ப வீடு கட்டும்போது
அப்பாகிட்டே
சிமென்ட் பாத்து வாங்கச் சொன்னீல்ல

2 கருத்துகள்:

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
அற்புதமான கவிதந்தமைக்கு நன்றி
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: பேனாமுனைப்போராளி:

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ரசித்தேன்...

செல்லத்திற்கு வாழ்த்துக்கள்...

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...