திங்கள், ஆகஸ்ட் 20, 2012

உன்னோடு போனது துக்கம்



எந்த வீட்டிலும்
பிலாக்கணம் பாடவும் 
எந்தச் சாவிலும் மாரடிக்கவும் 
முன்னே முன்னே போகும் 
அலமேலு ஆத்தா
வாய் கோணிச் செத்தாள்... 
சாராயக் காசு வாங்க 
ஆளில்லாக் கவலையில் 
மகனும்,
சிறுவாட்டு இருப்பு சொல்லாது 
பொசுக்கென்று போன கவலையில் 
மருமகளும்...
வாசல் பெருமாளைப் பட்டினி 
போட வேண்டாமென 
அழுகையை ஒத்தி வைத்தது 
தெரு சனம்..


4 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

யதார்த்தமான நடக்கும் சம்பவம்...

மனம் ஏனோ வருத்தப்பட்டது...

www.sramgopal.blogspot.com சொன்னது…

இதுதான் இயல்பு. ஒரு யதார்த்த விஷயத்தை கவிதையாக்குவது உங்களுக்கு மிக கைதேர்ந்த கலையாகி வருகிறது. வாழ்த்துக்கள். உங்களுக்கு தெரியுமா? ஈரோடு பகுதிகளில் பெரிய காரியம் என்றால் சாவு, சிரிய காரியம் என்றால் திருமணம் .

உமா மோகன் சொன்னது…

நன்றி தனபாலன் .

உமா மோகன் சொன்னது…

நன்றி கோபி

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...