வெள்ளி, மார்ச் 23, 2012

யுகங்கள் தோறும்

காரை பெயர்ந்த 
கட்டைச்சுவர் ..
புதுக்கருக்கில் 
சுவரொட்டி மறுக்கும்                                                          
ஆள் உயரம்...
...............
மதில்கள் மாறினாலும் 
விரிந்த விழிகளோடு 
பூனை அங்கேயே...
கண்ணாடிச் சில்லும் 
கம்பிவலையும் கூட 
அரூபமாய்த் தள்ளிவிட்டு 
தன இடம் விடாமல் 
எப்போதும்போல் 
இப்போதும் பூனை...
மதில் நிலையற்றது !
பூனை நிலையானது!     
                                        
19 3 12 உயிரோசையில் வெளியானது
 
 
 
 
 

2 கருத்துகள்:

கீதமஞ்சரி சொன்னது…

'மதில்மேல் பூனை' நிலைப்பாட்டை நிலைக்கவைக்கவேனும் நிலைக்கவேண்டும் பூனை, நிலையற்ற மதில்மேலும்.

வசீகரிக்கும் கவிதை. பாராட்டுகள் சக்தி.

உமா மோகன் சொன்னது…

நாம் பலரும் மதில்மேல் நின்றே வாழ்வைக் கழிக்கிறோமே எனச் சமயங்களில்
தோணும் கீதா .நன்றி

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...