திங்கள், ஏப்ரல் 16, 2012

கடன் வாங்கிக் கழித்தல்

 
நேற்றைய நடுக்கத்திடம் 
இன்றைய தினத்தைக் 
கடன் வாங்கியிருந்தேன் !
முந்தாநாளைய வெறுப்பிடம்
இரவல் வாங்கியதுதான் 
நேற்றாக இருந்தது!
இன்றைய எரிச்சலிடம்
நாளையைத் தரச் 
சொல்லியிருக்கிறேன்....

அச்சத்திடமும்,அவமானத்திடமும்,
இரங்கலிடமும் 
ஏதுமிலாவிடினும் 
புழுக்கத்திடமாவது 
கேட்டுப் பெற்றவைதான் 
போன வாரத்தின் 
போன மாதத்தின் 
போன வருடத்தின் 
நாட்கள் கூட....

நிறைவு நாளாவது
நிறைவிடம் 
பகிர்ந்து கொள்ள 
வாய்க்குமோ ....
தெரியவில்லை.

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...