வியாழன், அக்டோபர் 11, 2012

அபி உலகம் -10

சாலை தாண்டி ஓடித் திரும்பும் 
அபியைத் திட்டுவதா ,
பத்திரமாக மீண்டதற்கான 
பெருமூச்சோடு 
அணைத்துக் கொள்வதா 
எனத் திகைத்திருக்கும் 
அம்மாவை 
மேலும் குழப்புகிறாள் 
அந்தக் காலிமனையில் 
கொத்தித் தின்ன ஏதுமற்று 
ஏமாந்து திரும்பும் 
காக்கைகளிடம் 
காட்பரிஸ் பகிர்ந்து 
திரும்பும் அபி...

4 கருத்துகள்:

ramgopal சொன்னது…

அட போங்க. பிரமாதம். பேசாம அபி உலகம் என்றே புத்தக தலைப்பினை வைத்து கவிதை தொகுப்பு வெளியிடலாம். முத்திரை கவிதைகளாக, அபி உலகம்-...... அருமை.

உமா மோகன் சொன்னது…

நன்றி கோபி ..))))

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அழகு... அருமை...

நன்றி...

உமா மோகன் சொன்னது…

நன்றி தோழர்

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...