வியாழன், ஆகஸ்ட் 15, 2013

நாம் நான் நீ

 நட்சத்திரங்களைப்  பறிக்கத்
திட்டமிட்டவாறே
சாய்வு நாற்காலியில்
முன்னும் பின்னும் ஆடியவன்
சொல்லிக் கொண்டிருக்கிறான்
இப்போதெல்லாம்
நட்சத்திரங்கள் வெகுதொலைவு
சென்றுவிட்டதாக...


கைப்பிடி செம்மண்ணும்
அகழாமல் விதைத்துவிட்டு 
முளையாப்பயிரின் ரகம்
குறித்த புகாரோடு
அதோ
மோட்டார் சைக்கிளில் விரைபவன்
உங்களோடுதான் தேநீர் பருகினான்...


கனவுகளை விற்பவன்
வாராவாரம் பொதியையோ
அட்டையையோ வடிவையோ
மாற்றுவது வழக்கம்
எனத் துப்பறிந்தவாறே
இவ்வார இலவசம்
என்ன என்றேன் நான்..

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...