புதன், ஆகஸ்ட் 28, 2013

பிணையாளியாக


நிலவுப் பொழுதொன்றில்
கதவுகள் விரிந்தன...
பிரார்த்தனைகளிலிருந்து கசிந்த
தூபப்புகை
முதலில் வெளியேறியது ,,
தொடுத்தும் தூவியும்
சாற்றியிருந்த மலர்கள்
கிடைத்த தென்றலின்
கால்களை இறுகப்பற்றியபடி
மிதந்து கடந்தன ..
அவற்றின் பெருமூச்சை
நான் கேட்டபடி இருந்தேன்
இந்த வழியும் இந்தக் காற்றும்
போதுமானதில்லை
என்ற என் வார்த்தைகளைக்
கேளாதது போல்
விரைந்து கடந்தன
நான் இசைத்த தோத்திரங்கள் ......

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...