திங்கள், ஏப்ரல் 13, 2015

பயணங்கள் முடிவதில்லை

மனிதர்களுக்கென்ன

ரயிலேறிப் போய்விடுகிறார்கள்  


கசிந்த கண்ணீருக்கும்

குலுக்கிய கைகளுக்கும் 

மென்தழுவலுக்கும் 

மௌன சாட்சியாய்க் கிடக்கும் 

நடைமேடையையும் 

உயரத் தூண்களையும் 

கழிப்பறை வாடை கருதாமல் 

பூவும் பிஞ்சும் உதிர்த்தபடி 

நிற்கும் 

பெயர் தெரியா இம்மரத்தையும் 

என்ன செய்வது…..


கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...