சனி, அக்டோபர் 24, 2015

இச்சை

முத்தத்தைப்பற்றியே 
பேசிக்கொண்டிருக்கிறீர்கள்
குறிப்பாகவும்வெளிப்படையாகவும்
மேலும் மேலும் வர்ணிக்கிறீர்கள்
உவமான உவமேயங்களால்
அலங்கரிக்கிறீர்கள்
பாடுகிறீர்கள்
மிகப்பெரிய அனுபவமாக
விவரித்துக்கொண்டேயிருக்கிறீர்கள்
அனுபவங்களுக்கு நேரமும்
வாய்ப்பும்இல்லாதவன்
கதாநாயகர்களின் சாகசங்கள்
தம்போல்வான் வாழ்வில்நிகழாதுஎன
திடமாக நம்பியபடி
உங்களைக்கேட்பதும் பார்ப்பதுமே
தம் அனுபவம் எனஎழுதிக்கொள்கிறான்


கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...