செவ்வாய், அக்டோபர் 20, 2015

தொலைநோக்கு


அவல்பொரிகடலையை
ஆண்டுக்கு ஒருமுறை ஆவலுடன்
ஏந்திக்கொண்டு 
சக்கரைத்துணுக்கைத் தேடியடைவதில்
மகிழ்ந்த போதும்
தும்பைவரிசையைத் தாண்டி
ஒடித்த கிளுவைக்குச்சியை
நீட்டி நீட்டி
ஓடும் கூட்ஸ்வண்டியின் பெட்டிகளை
எண்ணிச் சொல்வதில்
போட்டியிட்ட போதும்
இத்தனை அருள்கேட்கும்
ஆவல் எங்களுக்கும் இல்லை
ஈன்றார்க்கும் இல்லை

சரஸ்வதி

நூறும் ஆயிரமுமே
போதுமாயிருந்தது எங்களுக்கு
வீட்டுப்பாடம் நடுவேயும்
வீடியோகேம் நடுவேயும்
விழுந்து விழுந்துவணங்கும் பிள்ளைக்கு
முன்மழலை வகுப்பின் முன்னே
சொல்லிக்கொடுத்துவிடுகிறோம்
உந்தன் வந்தனப்பாடல்களை
லட்ச லட்சியமென்றால் சும்மாவா
அப்புறம்
கைப்பிடிஅவலோடு காட்பரிஸ்
மறவாமல் வாங்கிவிடுகிறோம்
பிள்ளைகளுக்கு அவல் சேராது


கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...