புதன், மார்ச் 30, 2016

ஆணவ ஆபரணம்

சொற்கள் எதிரேதான் கிடக்கின்றன
சில துளிகளோடு காய்ந்த
தேநீர்க்கோப்பை
சாய்ந்த சாயமா
செய்தித்தாளின் படத்திலிருந்து சொட்டிய 
பச்சை ரத்தமா
எதுவென்று தெரியாத
கறை படிந்த மேசை மேல்
எழுந்து என்ன செய்யப்போகிறேன் போ
என்ற ஆயாசத்துடன் கிடக்கின்றன
தொலைக்காட்சி மின்வடத்திலிருந்து சொட்டும் ரத்தம் நின்று
ஐந்தே நிமிடங்களில்
அடுத்த அரிவாள்
ஒவ்வொரு சங்கமாக
ஆதரவு அறிக்கை வாங்கி
அடுக்குங்கள்
ரத்தப்பொட்டுகள்
நாளாவட்டத்தில் காய்ந்து
நீலமாகி ஆட்காட்டி விரல்நுனியின் ஆபரணமாகிவிடும்
சொற்கள் அப்படியே கிடக்கட்டும் மனசுபோல
உலர்ந்துகொண்டு....


கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...