சனி, செப்டம்பர் 29, 2018

உதட்டோர ரத்தம்

திறந்த காயத்துக்கு
கத்தியால் மருந்திடவே
படித்த பரம்பரை
அரிவாளால் பூப்பறிக்கும்
பனித்துளியையும் விசும்பின்
கண்ணீரெனக் கசிந்த கதை
பூ மறக்கும்
கையோ கத்தியோ இங்கேதானே வரப்போகிறாய்
என சத்தமின்றிச் சிரித்தபடி காத்திருக்கும் மயானம்
அங்காளி உதட்டோர ரத்தத்தை
கைக்குட்டையால் சரிசெய்துவிட்டு

 நாவைச் சரியாக 
தொங்கப்போட்டுக் கொள்கிறாள்




கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...