வியாழன், டிசம்பர் 20, 2018

மேலிருந்து கீழாக


பட்டுப்போகவுமில்லாமல்
துளிர்க்கவுமில்லாமல்
சவலையாகவே நின்ற
மிளகாய்ச்செடியை அகழ்ந்தெடுத்துவிட்டுப் 
புதிய கன்று ஒன்றை நட 
ஒரு காலையும் சிறு கவலையும் 
போதுமாயிருந்தது
விளையவிருக்கும் காரத்தின் கற்பனையிலோ
ஒரு பருவமும் உளைச்சலும்
காம்பிலிருந்து வீழ்த்திய
பெரியப்பன் நினைவிலோ
கண்துடைத்தபடி படியிறங்குகிறான்
மாடித்தோட்டக்காரன்




கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...