வியாழன், டிசம்பர் 20, 2018

கனம்தாங்காக் காற்று


அடுத்த உடுத்தலுக்குமுன்
இந்தக்கோடியிலும் அந்தக்கோடியிலுமாக 
ஏதோ ஒரு பிடிமானத்தைப்
பற்றிக்கொண்டு
காயும் பழஞ்சீலை
கரைந்த சாயத்தையும்
காணாமற்போன கோடுகளையும் 
வெயிலிடம் பீற்றிக்கொண்டிருக்கிறது
முறையிடலின்
கனம்தாங்காக் காற்று 
உய் உய்யென ஓடிவந்து 
பரிவாகத்தடவிப்போகிறது

மழைத்தாரையின் கீழ் சுகமாக நிற்கிறது பாறை
பிரியம் என்றுமில்லை பேதமை என்றுமில்லை
சுகம் என்பதும் என் சொல்லே
களத்துமேட்டிலும்
கரிபிடித்த அடுப்பங்கரையிலும் கரைந்து கரைந்து
நைந்த
முந்தானை ஒன்றே காசு முடிச்சுக்கும் 
வியர்வை துடைக்கவுமாகக் கொண்டு
கூடை சுமக்கும் தெய்வானை ஆச்சியைப்போல

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...