செவ்வாய், செப்டம்பர் 13, 2011

கால் மாறி ஆடியவன் !

வலி உணர்வது
மனமா..
உடலா..
அடர்த்தியின் அளவு
அவரவர் நேர்விலா
     அணுக்கப்பார்வையிலா
பித்தாய் ,
பேயாய் ...
உருண்டு உருண்டு
   உழன்று திரிந்து
கண்டறியாதன
காண வரவைத்த
"திருப்பாதம்"
திருப்பி ஆடியது
பாண்டியனுக்காகத்தானா?

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...