புதன், செப்டம்பர் 21, 2011

வாழ்க்கைக்கல்வி


ஓட்டைக் குடிசைக்குள்
சாரல்
ஒழுகும்இடம் அறியாது
மழைக்குத் தயாராகிறது
மனசு...

ஒதுங்காமல்
ஒடுங்காமல்
ஒழுகலுக் கெல்லாம் 
ஒழுகாத பாத்திரம் 
ஏந்துவதும் ...
ஊசிக்குளிர்
உறுத்தாதது போல்
உள்ளேவிட
கப்பல் மடிப்பதும் ........
அட....
வாழக்கற்றாய் ...!
வாழிய ...வாழிய ...! 

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...