செவ்வாய், ஜூன் 05, 2012

அவளாக வேண்டும்

ஆதிகடவுளின் சாயலில் 
சுருள்முடி 
நெற்றி வழிந்து காற்றிலாட ,
பொருளறியாப் புன்னகை 
மிதக்கும் முகத்தோடு 
மிதிவண்டி ஓட்டிச் செல்லும் 
சிறுமியாக 
ஒரு வாய்ப்பளியுங்கள்...
இயலாதென்றால் 
அவள் 
முணுமுணுக்கும் பாடலாக ,
விரும்பி அணியும் 
மஞ்சள்வண்ண ஆடையாக,
அலட்சியமான பாவனையில் 
தோளில் மாட்டிச் செல்லும் 
பையாக....
நளினமாகக் கையாளும் 
மிதிவண்டியின் 
குஞ்சலங்களாக....
ஏதாவதொன்றில் 
என்னை உள்ளிருத்துங்கள்....
அவளது அன்றாடப் பயணம் தரிசிக்கும் 
மரத்தடியாக 
மாற்றினாலும் சரியே !

2 கருத்துகள்:

கீதமஞ்சரி சொன்னது…

கடவுளிடம் நேரப்பட்ட கோரிக்கை நிறைவேறும் நாளில் அவளாகவே இருந்திட வாழ்த்துக்கள். வாசிப்பவரையும் தனக்குள்ளிழுக்கும் வசியம் கொண்ட உங்கள் கவிதைக்குப் பாராட்டுகள் சக்தி.

உமா மோகன் சொன்னது…

மிக்க நன்றி கீதா.

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...