திங்கள், ஜூன் 16, 2014

இன்னொரு மரணம்


கட்டைல போறவனே 
என யாவரையும் கரித்த 
பரமசிவம் தாத்தாவை 
நகர
மயானம் 
காரில்தான் அழைத்தது.

ஈட்டாத செல்வம்
முகூர்த்த நாள் மரணம் 
பூஇறைக்காத 
துப்புரவான பயணம் தாத்தாவுடையது 

சமைக்க அலுப்பான 
ஏதோ ஒரு இரவு போலவே 
மயானத்திலிருந்து திரும்புகையில் 
பக்கத்துக்கு வீட்டில் நாதஸ்வரமும் 
மேசைமேல் பரோட்டா பார்சலும் 

"போனா இப்பிடிப் போவணு ம்" 
"பொசுக்"கென்று முடிந்த வாழ்வை 
எடுத்தபின் வந்த அத்தை 
பாராட்டிக் கொண்டிருந்தாள் 
குறைந்தபட்சம் -அவளாவது 
அழுதிருக்கலாம் இல்லை 
சண்டைபோட்டிருக்கலாம் .....

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...