புதன், டிசம்பர் 30, 2015

டிசம்பர் பூக்கள் 2015

எப்போதும்போல்
அழுத்திஅழுத்தி..மீண்டும் மீண்டும்
ஈரத்தைத் துப்புரவாக மிதியடியில்
துடைக்கிறேன்
இதுவும் குற்ற உணர்ச்சி
தருவதாக
இந்நாட்கள் நெருக்குகின்றன    
(மழை வெள்ளத்தில்  சென்னையும் கடலூரும் தத்தளித்த நாட்கள் )
************************************************

ஏகப்பட்ட விளக்கு
இருள் இருக்கிறது இருளாகவே


*****************************

துண்டு போடு
உடை
நொறுக்கு
துளியாவது கிடைத்தால் சரி
******************************************

நாம் பேசிக் கொண்டிருக்கிறோம்
கை கழுவிக்கொண்டான்
சாக்கடைத்துளி
உதறினான்
சாக்கடைத்துளி
வாருங்கள்
சுத்தமாகிவிட்டது அவ்விடம்
அவனுக்கு
என்ன வேண்டுமென
நாம்
அமர்ந்து பேசலாம்
****************************************
ஒன்றையே பேச
உலகம் அனுமதிப்பதில்லை
ஒன்றே நிலையான
வாழ்வு
இதில் அடக்கமில்லை
**************************************
புரியாது எனத்தெரியும்
இவ்வளவு....
இப்போதுதான் தெரியும்
*************************************
உயரம் உன் பார்வை
துயரம்
அது வெறும் வானம்
**************************************

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...