வெள்ளி, நவம்பர் 20, 2015

முகநூல் துளிகள் -3



வனத்துக்குள் துரத்து 
இல்லை சுட்டுவிடு 
சில்லறைக்கு மண்டியிடுமுன்
********************************************
தருவதற்கு ஏதுமிலா வெறும்
அகப்பை 
எரியட்டும்
*********************************
ஒரு நிமிடம்தான் 
நீ நீயாக 
பிறகு 
மற்றும் சிலராகிவிடுகிறாய்
***********************************************
உன் நம்பிக்கையைவிடப் 
பெரிய சிலுவையில் 
யார் அறைந்துவிடப்போகிறார்கள்
*******************************************
ஒரு அழிரப்பர் 
எல்லாவற்றுக்கும் கிடைத்தால்
எவ்வளவோ தெளிவாயிருக்கும்
***********************************************
தெளிவாகவோ உக்கிரமாகவோ 
இருக்கவேண்டியிருக்கிறது...
ஆகப்பெரிய சந்தர்ப்பங்களைப் 
புறந்தள்ள வேண்டியிருக்கிறது..
ஆகமோசமான நிமிடங்களைப் பொறுத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது
பார்க்கவும் பாராததுபோல் இருக்கவும்
கேளாததுபோல் இருக்கவும் கேட்கவும்
மறந்து தொலையவும்
சுமந்து திரியவும்
கல்மிஷம்தான்
ஒத்துக்கொள்ளவும் பசப்பவும்கூட
சீ
நடுங்காதிரு

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...