திங்கள், மே 16, 2016

முகநூலில் அன்னையர் தினம்

எதையாவது செய்து ,சொல்லி
எரிச்சலூட்டி விடுகிறீர்கள் 
கிழித்தாக வேண்டிய 
நாட்காட்டித்தாள் தனது
கடைசி மணித்துளிகளைப் படபடப்புடன்
கடந்துகொண்டிருக்க
கடக் என்ற எலிப்பொறியின் சப்தம்
எழுப்பிய வெற்றிஉணர்வு
சற்றேதணித்திருக்கிறது எரிச்சலை
நாளை இந்தஇடத்தை
நிரப்ப எலிகள் இருக்குமாதெரியவில்லை

******************************************************
உறவுகளைக் கொண்டாடுவது வாளேந்திய தருணமாக 
மாறிவிட்ட காலங்களில்தான்
ஒவ்வொரு உறவுக்குமான
தினங்கள் பெருகி
மூழ்கடிக்கின்றன 
பசி தீராவிடினும்
பழங்கணக்கின் அசைபோடலுக்காவது
வேண்டியிருக்கிறது பொய்ப்பல்

************************************************************
கண்ணோடும் வயிற்றோடும் மட்டுமே
காலமெல்லாம்
பிணைந்திருக்கிறது 
அன்னையுடனான கொடி
அவள் கண்ணீராகவும்
உங்கள் ருசியாகவும்
உணரப்படாத
தாயைக் கொண்டாடத்
தலைப்படுவீரோ மானிடரே

***********************************************************

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...