வியாழன், மே 05, 2016

முகமற்றவளின் முகம் தெரியும்

முகமற்றவளாகவும்
பெயரற்றவளாகவும்
அறியப்படாமல்
ஆன்மா உள்ளவர்களைக்
கேள்வி கேட்கிறாள்
கேள்வி கேட்டதால்
குடல்சரிந்து போகுமுன்
உடல்சரிந்து போனவள்
கற்றவர் தேசமானாலென்ன
கடவுளின்
தேசமானாலென்ன
பெண்ணுக்கிருப்பது
சிதைத்திடத்தோதான
உறுப்புகள் மட்டுமே
வாருங்கள்
நமக்குக்கோஷம் போடும்
வாதம் செய்யும்
கண்ணீர் விடும் வேலையிருக்கிறது
தேர்தல் நேரம் வேறு
அடுத்து எவளுக்காவது
நிகழ்கையில் பார்த்துக்கொள்ளலாம்


கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...