செவ்வாய், ஆகஸ்ட் 14, 2018

அச்சம் என்பது....

பொய்யுரைகளுக்கு
பொய்ச்சிரிப்புகளுக்கு
பொய்ம்முகங்களுக்கு
ஒரு மச்சம்கூட இல்லையே சகாவே


***************************************************************


அது முதலில் சன்னலுக்கப்பால் நின்று
 வெளிச்சமிலாப்பொழுதுகளில்
 எட்டி எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தது
ஏதோ நிழலாடுகிறதே என
தலை நீட்டியபோது
அரளிக்குத்துக்கும் சுருள்
குரோட்டனுக்கும்
நடுவே பதுங்கிக்கொள்ளும்
பார்த்தும் பாராதது போல்
உள்திரும்புகையில்
துணிந்து கதவருகே ஒண்டி நிற்கத் தொடங்கியது
இரவலனாக நின்ற பரிதாபம்
காணச்சகியாது
ஒரு பிடி அன்னமிட்ட நொடி முதல்
கர்ணகுண்டலமானது
செஞ்சோற்றுக்கடனாம்
ஆடிக்கொண்டிருக்கும் அவலமே
ஆட்டுவிக்கிறாய் ஆடுகிறோம்





கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...