செவ்வாய், ஆகஸ்ட் 14, 2018

ரோஸ் கவுன்

ஒருநாளும் வாய்க்கவில்லை
அவள்போல ரோஸ் கவுனில் சுழன்றாட
பார்த்துவிட்டு வந்தவுடன் 
குழம்பு சுடவைத்து 
தோசை வார்த்த மும்முரத்தில் மறந்தாலும் 
கனவில் நினைவு வரும் 
ஒரு காலத்தில்
அதே ரோஸ் இல்லையென்றாலும் 
அதன் சாயலில் ஒரு ரவிக்கைத்துணி 
எடுத்தபோது ஏனோ நினைவிலேயே 
நினைவு வந்தது 

இப்போது சுற்றினால் தலை சுற்றும் என
சிரித்துக்கொண்டாள்

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...