வியாழன், பிப்ரவரி 07, 2019

குவிந்த கண்ணொளி

தோல்விதான் என்று முடிவானபிறகும்
ஒரு புள்ளியில்தான்
என்றொரு சமாதானம்

******************************************
முணுமுணுப்பு
தொடங்கி
பெரு ஓலம் வரை
நுரைத்தே கடக்கிறது கடல்
நுரைக்கென்று அர்த்தமிலா கடல்
************************************************

இதழோரம் கசிந்துகொண்டிருந்தது
விஷமல்ல 
இளநகை
முன்பின் பார்த்திராத உனக்கு 
எப்படி அடையாளம் தெரியும்
பாவம்
****************************************************
ஒன்றுமில்லாத கையையும் குவித்து மூடி 
எதையோ போல் பாதுகாக்கும் 
பாப்புக்குட்டியின் கண்ணொளியில்
கருகிப்போகிறார்கள் 
எதையோ கைவிட்டவர்கள்
மிச்சம் யாரோ

****************************************************

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...