ஞாயிறு, பிப்ரவரி 10, 2019

மனம் என்ற மண்ணாங்கட்டி


தாண்டிப்போவதென்று முடிவுசெய்யும் வரை
ஆரிக்கிள் வென்ட்ரிகிள்
தெரியாது தறிகெட்டுத் தப்பாட்டம் போடக்கூடும்
விரல்நுனி போலிருந்து
முழங்கைவரை ஆடிநடுங்கலாம்
பாதம் முழுக்க மரத்து வேரறலாம்
நேர்ப்பார்வைக்கு வழியின்றி
கருவிழி ஒதுங்கி இமை இழுத்து அரைவாசி போர்த்தலாம் 
மனம் என்ற அந்த மண்ணாங்கட்டியைக் 
கரகரவென உதிர்த்துவிட்டுவிட்ட
அவர்களைப் பாருங்கள்
கெட்டவார்த்தையென்ன
கல் என்ன
கலவரம் என்ன
ஜாம்ஜாமென நடத்தவில்லையா

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...