வியாழன், பிப்ரவரி 07, 2019

கூடுடைத்தல்

பூக்கத்தொடங்கிய 
மரமல்லியின் 
கீழ் நின்று 
எப்படியும் ஒன்றிரண்டு 
கூந்தல் கலைக்காதா காத்திருந்தபோது
கலைத்தது காற்று
நீளக்காம்புகளோடு 

தரையெங்கும் மரமல்லியின் பரிகாசம்

***************************************************
மிதிக்காமல் நகரச்சொல்லி
 நிழல் இறைஞ்சிக்
கொண்டிருக்கிறது
கவனி

*****************************************************
நூதன இழை
கட்டியிருக்கிறது
அகாலத்தையும்
அக்காலத்தையும்

ஒற்றிய பிழை

**************************************
பளிங்குக் கருங்கல் பாவிய 
பழைய வீட்டின்முன்வாசலில் 
விழுந்தழுதபோது
சிராய்ப்புத்தான் என்பது சமாதானமாக இருந்தது
கொஞ்சம் காயம் பட்டிருக்கலாம்
தழும்பாவது மிஞ்சியிருந்திருக்கும்
**************************************************
நெளிந்தபடியே முடிந்துவிடுவோமோ 
அஞ்சுகிறது 
கூடுடைக்க வலிமையறியாப்புழு

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...