புதன், ஏப்ரல் 08, 2020

என்னைப்பாரடி

அக்கம்பக்கம்
இடித்துக்கொள்ளாமல்
பார்த்துத்திரும்ப
வழிகாட்டி முடித்ததும்
ஐந்தோ பத்தோ நீட்டி
ஒரு
அவலச்சிரிப்பைப் பெற்றுக்கொள்
அவன்கும்பிடு இங்கு
உன் கும்பிடு எங்கோ
வாங்கிக்கொடு
கொடுத்து வாங்கு
எல்லோருக்கும்
இருக்கிறது
ஒரு வாசல்


*************************************************************
மாற்றிமாற்றிக் கட்டிப்பார்க்கிறேன்
சார்த்திய காஞ்சிப்பட்டுக்கும்
காக்காபொன்னுக்கும்
மலர்க்கண்
எப்போதும் அப்படியே
அம்மை
கிளியை விட்டு என்னைப்பாரடி
ஒருமுறையேனும்

**********************************************
எங்கும் பார்த்திராதவள் என்று தெரிந்தாலும்
எங்கோ பார்த்ததுபோல்தான்
இருக்கிறது
நினைவைத்தொட்டு
இட்டுக்கொள்
ஒரு பொட்டு

************************************

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...