புதன், ஏப்ரல் 08, 2020

வெய்யிலும் நிழலும்

தவறு குற்றம் என்பதெல்லாம் 
எளிய மனிதர்களின்
கைநீர்
பெரியவர்களின் அகராதியில் 
இடமும் பொருளுமற்றதால்
அந்நீரை உங்கள் மேல் தெளித்து 
புனிதமாக்க புறப்பட்டார்கள்
அதென்னவோ கண்ணீராக வழிந்தது
*****************************************************
இருக்கும் இடத்தில்
தள்ளிப்பிடித்துக்கொண்டு நிற்க முயலும்
பள்ளிச்சிறுவர்களாக
என்வாசலில்
வெய்யிலும் நிழலும்
*******************************************************
மௌனத்தை மொழிபெயர்க்கப்போனால்
அங்கும் மௌனமே
வேறு உடை பூண்டு நிற்கிறது
******************************************************


கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...