புதன், ஏப்ரல் 08, 2020

பக்கவாட்டுப்பாசி என்ற குரு

கொஞ்சம் கொஞ்சமாகப் 
பிய்த்துத்தின்றுகொள் பசியை
துளித்துளியாகப்
பருகிக்கொள் தாகத்தை
ஆங்
அப்படித்தான்
குறைந்தது
பத்துப்பற்களாவது தெரியும்படி சிரி
யாரும் வந்து உதடுகளை 

அகல விரித்துவிடும்படி வைத்துக்கொள்ளாதே
பூரணம்

*******************************************************
தனிச் சொற்களின்
சுவையை உணரச்
சொல்லிக் கொடுக்கிறது
சுவர்ப்பல்லி

**********************************************
எதிர்பாரா இளஞ்சூட்டில் 
நீரைப்பொழிந்து
விரல்களின் நடுக்கத்தைச் 

சமன்படுத்திய குழாய்க்குத் தெரியாது
எவ்வளவு பெரிய அழுகையின் 

மென்னியை முறித்தோமென்று
******************************************************
நீயே எழுப்பிய
சுவர்தான்
ஆள்வதற்கு அவசியம் என நினைத்தபோது.
பக்கவாட்டுப்பாசியும்
பூஞ்சைக்காளானும்
குருவாகும் நாளிது


கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...