ஞாயிறு, அக்டோபர் 16, 2011

சென்னைப் பூ 

அடுக்ககத்தின் 
தொட்டிரோஜா 
மல்லி ,சாமந்தி 
மட்டுமே தெரியுமென்றாள்
அமலா..
பவழமல்லி,செண்பகம் ,
மகிழம்பூ  காட்ட 
பாண்டிபஜார் கிளம்பினாள்
அம்மா.
குறுஞ்செய்தி பார்த்து 
கேட்ட மகளுக்கு 
தனது  இடைநகரில்
எங்கு காட்டுவதென 
தெரியாத் திகைப்பு 
சித்திக்கு ...     

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...