சனி, அக்டோபர் 29, 2011

மழை நின்ற காலை!

இரவு சரியான மழை...
சலசலத்து
ஊற்றியபடி கதையளந்தது
மொட்டைமாடி வடிகுழாய் ...
" உனக்கென்ன ...
தள்ளிவிட்டால் ஆச்சு...
உள்ளே-வெளியே
விளையாடும் நீர்
போதாதென்று
உன் தொல்லை வேற ...
குளிர் தாங்கலை..,:
புலம்பியது சுற்றுத்தரை .
மறந்துபோய்
வெளியில் வைத்துவிட்ட
மகாராசன் வரட்டும்...
மரத்துப்போன கால்களோடு
புலம்பிய ஏணிக்கும் 
வடிகுழாய் நீர் சிதறல் 
ரசிக்கவில்லை...
"என்ன விளையாட்டு,:;;;;
எரிச்சல்பட்டது...
கள்ளச்சிரிப்போடு
நகர்ந்தது
கருமேகம் !

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...