திங்கள், பிப்ரவரி 20, 2012

கண்டத்தில் நிறுத்தா விஷம்



கடகடவெனக்
குடம் குடமாய்க்
குடித்து...
துரோகம்,மோகம்.
காமம் ,சீற்றம்
ஒடுக்கம்
சகலமும் செரித்து
நீலத்தை
வானிலும் கடலிலும்
பிழிந்துவிட்டு
நடமாடுகிறாள் நீலா!
நீலமாயா...
நீலவாகினி...
நீலயோகினி...
நீலாயதாட்சி...
நீலோத்பலா...

இளமஞ்சள் சுடிதாரில்
பச்சைப் புடவையில்
ஏதேனும் ஒரு
சீருடையில்
இருசக்கர வாகனத்திலோ
பேருந்திலோ
நடைபாதையிலோ
பார்க்க முடிந்தவர்க்கும்
பக்கத்திலுள்ள நீலா
தெரியமாட்டாள்...

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...