ஞாயிறு, நவம்பர் 02, 2014

சக உதிரிகள் அல்லது சாமான்யர்கள்




இழவு வீட்டிலும் 
பிணமாகக் கிடக்க வரம் கேட்கும் 
"முன்னிலை"யாசகர்களின் உலகில் 
அவன் நுழைந்ததேயில்லை.....

கிடைத்தது தின்று 
கிடைத்ததில் வாழ்ந்து 
கிடைத்த வழியில் சாவான் 
விருப்பத் தேர்விலாமல் ...
.
இடிந்து குலையும் கட்டிடம் 
கவிழும் இரயில் 
வெடிக்கும் குண்டு 
எங்கும் ஒப்புக் கொடுத்தபடி 
உதிர்கிறான் ...

உதிரி மனிதன் ஒருவனை 
குப்பைக் குள்ளிருந்து 
மீட்டெடுக்கும் மஞ்சள் தொப்பிக்காரன் 
காமெராக் கண்கள் தின்ன 
அவனை அனுப்பியவாறே 
தானும் உதிரி சாம்ராஜ்யப் பிரஜையே 
எனச் சொல்லாமல் 
நகர்கிறான் 
இன்னொரு காலோ கையோ 


தேடியபடி... 

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...