சனி, நவம்பர் 08, 2014

எனக்குத் தெரிந்தவன்



ஊர்ப்பக்கம் போனா
பொவொண்டோ வாங்கிவாஎன்பான் 

பன்னீர் சோடா மறக்காம குடி 
மாயவரம் தாண்டுமுன் என்பான் 

டிகிரி காபிக் கடைகள்தோறும் 
குடித்துப்பார்த்து  
அசல் நகல் சொல்லிடுவான் 

பச்சைத்தேநீர்,பால்கலந்தது ,இஞ்சி மிளகு 
எதெது எவ்வெப்போது 
பட்டியல் உண்டு அவனிடம் 
பழச்சாறு கடைக்காரனிடம் 
நீரும் சர்க்கரையும்
அருகில் நின்று கலந்தால்தான் 
திருப்தி அவனுக்கு 

என் வீட்டின் காபி பில்டர் 
அவன் தந்த பரிசுதான் 
டிகாக்ஷன் பக்குவமும் சொல்லித் தந்தான் 

மதுக்கூடமொன்றிலிருந்து
தள்ளாடி வெளியே விழுந்த 
அந்த நாளில் 
அவனை நான் பார்த்திருக்க வேண்டாம் -
அவன் குழந்தையோடு 

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...