வெள்ளி, நவம்பர் 20, 2015

முகநூல் துளிகள்

கலைக்கப்பட்ட சீட்டுக்கட்டுபோல்
கிடக்கிறது வாழ்க்கை
அடுக்கிவிடலாம் எனநம்பித்தான்
உட்கார்ந்திருக்கிறோம்
கள்ளத்தனம் கடவுளும் பண்ணுவானோ

********************************************
தோற்றுத்தான் போகிறேன்
இத்தனைமுயற்சிக்குப்பின்
நான்சிந்தும் புன்னகையை
பிரயத்தனமும் பிரக்ஞையும்இன்றி
அன்றாடம் சிந்தி உதிரும் காட்டுப்பூவிடம்
*******************************

நீருக்குள்ளிருந்து எட்டிப்பார்த்த மீன்
சிரித்துக்கொண்டது
தூண்டில்காரன்
நிலவைத் தின்றுகொண்டிருந்தான்
**************************************

வயது எண்
வார்த்தை சொல்
பிரியம் பித்து
வாதை
உன்போல் பொருள் கொள்வது
**************************************

புரிந்துகொள்ள வேண்டியவற்றின் பட்டியல்
நீள்கிறது எனக்கு
கிழித்தெறிந்த அவன் புன்னகை
உட்பட


கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...