திங்கள், நவம்பர் 02, 2015

கடந்தகாலக் கதாநாயகி


வந்தாரை வாழவைப்போம்
என
புன்னகையாக ,ஈர்க்கும் பார்வையாக
காந்தக்குரலாக,கொடி இடையினளாக
நாட்டிய நடையாக,
நளின சுந்தரியாக
தெறிக்கும் செந்நிறத்தவளாக
கூர்மூக்கினளாக
அங்கச் செழிப்பினளாக
அடையாளங்களைக் கொண்டு
ஆதரித்த உலகில்
வயதின் அடையாளங்கள்
வாழ்வை மாற்றிவிட
எவரையும் எவரும் அழைக்கக் கூடும்
நகைச்சுவை என்ற பெயரில்
நாறும் சொற்களால்

கலை என்றும் நிலை என்றும்
குழம்பாது
மொழியறியாப் பெண்ணே
அப்படியே கடந்து போ

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...