திங்கள், நவம்பர் 16, 2015

பொறுப்புத்துறப்பு


நிற்காதா மழைஎன்ற கேள்விக்குப்பின்
வேறொன்றும் இல்லை
எங்கள் குடியிருப்புகளின் உள்ளேயும்நீர்
என்பதற்குப்பின் ஏரிகளை,குளங்களைத் தூர்த்த
யாரையும் குறிக்கவில்லை
நான்குநாட்களாக உணவுஇல்லை
என்பதற்கு மழையை அனுபவிக்கும்
அடுப்புப் பற்றவைக்காத எங்கள் சோம்பலே காரணம்
சாலைகள் அரிக்கப்பட்டுவிட்டது
என்ற விஷயம் விழுந்து மூழ்கி
உங்கள் வருமானத்துக்காகவே
கண்டுபிடித்தோம்
தண்ணீர்பாம்புகளையும்
நிறைந்த ஆறுகளையும்
எங்கள் பிள்ளைகள் பார்க்க
இதுபோல் வாய்ப்பு அரிது
அதனால்தான் உயிரையும்கொடுத்துவிடுகிறார்கள்
பிழைத்தவர்கள் நீச்சல் கற்றுக்கொண்டுவிடுகிறார்கள்
ஒருவேளைமழைபெய்து
ஒருவேளைவெள்ளம்வந்தால்
வீடுமூழ்குமே எனயோசியாமல்
சாக்கடைகளின் கரைகளில்
கட்டிக்கொண்டது எங்கள் பிழைதான்
கரைதாண்டிக்கட்டிய எஜமானர்களும்
மிதக்கிறார்கள்
நாளை படகுபிடித்து
நாங்கள் அவர்கள் வீடுகளுக்கும்
அவர்கள் தங்கள் வேலைத்தலங்களுக்கும்
செல்ல
மழைத்தண்ணீர் சூழ்ந்த ரோஸ்வுட்
கட்டில்களின்மேல் அமர்ந்து
பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறார்கள்
குளிர்தாங்காத கிழம்கட்டைகளை
நாங்கள் கணப்புகளின் பக்கம்
அமர்த்தியிருக்கவேண்டும்
ஆனால் அந்தஓரத்துச்சுவரும் கூரையும்
தகர்ந்ததால் அது தடைப்பட்டது
பரவாயில்லை
நனைந்த காணாமற்போன
புத்தகங்களைத் தேடும் சிரமம்தராமல்
எம் பிள்ளைகள்
வெள்ளம்கொண்டுசேர்த்த
குப்பை பொறுக்கிப் பிழைத்துக்கொள்வார்கள்
மதியஉணவுக்கென
நீங்கள் ஒதுக்கும்தொகை குறைத்துவிடலாம்
இலவசமாய்க்கொடுக்க
அடுத்தபட்டியல் தயார்தானே

1 கருத்து:

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்

அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...