புதன், ஜூலை 06, 2016

பெருவெடிப்பின் முன்பாக

மல்லிகை இன்னும் செடியிலிருந்து
கொடியாக மாறவில்லை
சர்வநிச்சயமாக 
நேற்று கொத்தாக 
மொட்டு வைத்திருந்ததை
ப்
பார்த்தேன்
அதிகப்படியாக ஒரு ப்
அனுமதிக்காத திரைபோல
பூவுமில்லை மொட்டுமில்லை
எலி இதையெல்லாம்
தின்னாது என்ற சமாதானத்துடன் நீரூற்றி
நகர்வதைத்தவிர
வேறென்ன செய்வேன்

*****************************************************************
இன்னும் நினைவிருக்கிறது
அன்பில் கனிந்த உரையாடல்கள்
புன்னகையாய்ப் பிறந்து
தளும்பி வெடித்த சிரிப்புச் சிதறல்கள்
மாற்றி மாற்றி 
விட்டுக் கொடுப்பதான தியாக லேபிள்
எதுவும் ஒட்டப்படாத இயல்பான
பகிர்வுகள்
எதைப் பற்றியோ
நாம் முரண்படப் போகிறோமென்ற
அறிகுறியே இல்லாது
இட்டுக்கொண்ட அற்பச் சண்டைகள்

அப்படியே இருந்திருக்கலாம்
வளர்ந்துவிட்டதாகச் சொல்பவனையும்
வாழ்ந்து கொண்டிருப்பதாகச்
சொல்பவனையும்
ஒரு அறை கொடுத்துவிட்டுவருகிறேன்
நான்சொல்லிநீகேட்கவும்
ஒன்றுண்டு
இந்த காசைக்கண்டுபிடித்தவனை
போய் அறைந்துவிட்டுவா
எப்படியும் நிகழப்போவதான
அந்த பெருவெடிப்பு நிகழுமுன்


கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...