புதன், ஜூலை 06, 2016

செம்பருத்தி

புரிந்திருக்கும் என்ற
நம்பிக்கையை
ஒரு உச்சு 
இடித்து நசுக்கிவிடுகிறது
அது போக
அடியிலிருந்து சிதிலம் உதறி
எப்போ தலைதூக்க

*********************************************
இவ்வளவுதானே
இதற்குள் எதற்கு
அவ்வளவு

**************************************************
நடந்துவிடும் என்ற நம்பிக்கை
ஓடுடைத்துக் கொண்டிருக்கையில்
சிறகின் கோதுகளில்
முள்வைத்துத் தைக்கிறாயோ

**********************************************************
அந்த மீன்குஞ்சு
மரமேறுவதைப் பார்த்தேன்
பழம் பறித்து இறங்கியதோ
பழமாகித் தொங்கியதோ

********************************************************
இவ்வளவு இலைகளைப்
போர்த்திக்கொண்டு
உறங்கிய செம்பருத்தி
உதிர்ந்தபின்
பூத்திருந்த காட்சியை
ஊகித்து ஊகித்து....
பூத்திருந்தபோது ஒருவர் கண்ணிலாவது பட்டிருக்கலாம்

******************************************************************************

உதிர்த்துவிட ஏதுமிலா
சரஞ்சரமான கிளைகளோடு நிற்கையிலும்
அலைக்கழிப்புக்குக் குறைவில்லை



கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...