திங்கள், டிசம்பர் 04, 2017

சாலையோர அங்காளம்மை-2

முழம் முழமாய்ச் சுற்றி வைத்த பந்துகளிலிருந்து
ஒரு கிள்ளு கூடத்தராது ஒயர்கூடையில் பதுக்கியபடி
தன்னை வணங்க காசு வீசும்
வாகனதாரிகளை மறித்துவிட்டு
பேரத்தின் எரிச்சலை வெற்றிலை எச்சிலாய்ப்புளிச்சிடும்
பேச்சியின் பேச்சும் கூவலும் 

அத்துணை சுவாரசியம்
எவரோ எப்போதோ சார்த்திய

மஞ்சள் சுங்கடியில் சான்னித்தியம் அருளும் 
அங்காளிக்கு 





கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...